Monday, 20 April 2020

அமைதியான நிலையில்
இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் நாம் சிந்திக்க நிறைய விக்ஷயஙகள் உள்ளன.  மனித நேயத்துடன் சிந்திக்க வேண்டும். உலகத்தின் வாழ்வாதாரம். இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகள். அவை என்னென்ன என்று பார்த்தோமானால் கதிரவன் ஒளி, ஆம் நமக்கு கிடைத்த வரம். அடுத்து மழை, மழையால் பெருக்கெடுக்கும் ஆறு, நிரம்பி வழியும் ஏரிகள், குளங்கள், நீர் நிரம்பிய அணைகள் இப்படி ஆகிய நீர் ஆதாரம் மற்றும் அழகிய மலைகள்,  காடுகள், பச்சை பசேலென்ற வயல்கள் இவை அனைத்தும் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்டுள்ள நன்கொடை ஆகும். நாம் அதை வணங்கி போற்றி வழிபடுவது நமது தலையாய கடமை ஆகும். இயற்கையை  வணங்குவது இறைவனை வணங்குவதற்கு ஒப்பாகும்.  அவ்வாறாக நாம் செயதோமானால் அந்த இயற்கை நமக்கு என்றென்றும் உறுதுணையாக இருந்து பல வகையிலும் நம்மை காப்பாற்றும்.  இதுவே இன்றைய சிந்தனை ஆகும்.

1 comment: