Wednesday, 22 April 2020

Manidhanin vazhkkai

மனிதனின் வாழ்க்கை
ஏதோ பிறந்தோம் ஏதோ வாழ்கிறோம் என்று தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு நாம் என்ன செய்கின்றோம், என்ன பேசுகிறோம், எப்படி பழகுகிறோம் , எப்படி வாழ்கின்றோம் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.  நமக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கையைப் பற்றியெல்லாம் நாம் நினைப்பதில்லை. அது மட்டுமா நாம் நம்மைப் பற்றிக்கூட நினைப்பதில்லை. அப்படியென்றால் நாம்  என்னதான் செய்கின்றோம். அதைத்தான் இப்போது சொல்லவருகிறேன. நமது வாழ்வில் நாம் துவக்க காலத்தில் அதாவது திருமணம் முடிந்து நம் புது இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கிறோம் என்றால், நம்முடைய அத்தியாவசிய  தேவைகளை புரிந்து அதற்கேற்ப நம் செலவுகள் அமைய வேண்டும் அல்லவா?  அப்படி  செய்கிறோமா ? இல்லையே,  நம்மை பற்றி அறிந்தால் நாம் அப்படி செய்வோம், ஆனால் நாம் பக்கத்த வீட்டைச் பற்றி அல்லவா நினைத்து க் கொண்டிருக்கிறோம், எப்படி என்றால் அவன் வீட்டில் எவ்வளவு பெரிய அளவில் தொலைக்காட்சி வைத்திருக்கிறார் அதைவிட சற்று பெரிய தாக நான் வாங்குவேன். என்றுதானே நினைக்கிறோம். அப்படி நினைக்கும் பட்சத்தில் நம் செலவு‌ நம் சக்தியை மீறிச் செல்லும் அல்லவா? ஆகையால் நாம் அந்த தொலைக்காட்சி பெட்டியை மாத தவணை முறையில் வாங்க நேரிடும். இப்படி பட்ட வாழ்க்கையை தான் நாம் எல்லா விசயத்திலும் கடைபிடித்து வாழ்க்கையின் இன்பத்தை தொலைக்கினறோம்.

No comments:

Post a Comment